சிக்கியது 600 எலும்புக்கூடுகள்..!வீதிக்கு வந்தது செக்ஸ் சாமியாரின் லீலைகள்..!
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, தற்போது அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கியபின், சிர்சாவில் உள்ள தேரா சச்சா தலைமை ஆசிரமத்திற்குள் என்ன தான் நடந்தது, நடக்கிறது என்பது பற்றி ஹரியானா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையின் முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினாலும், சோதனை செய்தபோது தெரியவந்த ஒரு விஷியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது அவருடைய ஆசிரமத்தில் இருந்து 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.இவர்கள் அனைவரும் எப்படி இறந்தார்கள்? யாரெல்லாம் இதில் அடங்குவர்? சாமியாரின் செக்ஸ் லீலைகளில் மடிந்தவர்களா? அல்லது பலி கொடுக்கப்பட்டவர்களா என தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள
மேலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது கூடுதல் தகவல். அதேசமயம், தலைமறைவாக உள்ள ராம் ரஹீமின் வளர்ப்பு மகளான ஹனீப்ரீத் எங்கிருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஏன் அவர் தலைமறைவாக இருக்கிறார் என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்