உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,00,006 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உயிர்களை கொன்று குவித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. சீனாவில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் வைரஸ் சீனாவை விட்டு விலகி மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,00,006 பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,32,466 ஆக உயர்ந்து, உயிரிழப்பின் எண்ணிக்கை 1,60,784 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 7,38,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 39,015 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் நாட்டில் 1,94,416 பேர் பாதிக்கப்பட்டு, 20,639 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 1,75,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23,227 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…