6-வது புரோ கபடி: மும்பை அணி முதல் வெற்றி ..!!

Default Image

6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
நேற்று முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி முதல் பாதியில் 15-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.
பிற்பகுதியில் மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். 10-வது நிமிடத்தில் ஆல்-அவுட் செய்து ஜெய்ப்பூரின் புள்ளியை (22-23) நெருங்கினர். அதன் பிறகு இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தனர். 30-27 என்று முன்னிலை பெற்றிருந்த ஜெய்ப்பூர் அணியினர் கடைசி கட்டத்தில் ‘பிடி’யை நழுவ விட்டனர். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை தோற்கடித்து முதலாவது வெற்றியை சுவைத்தது. சித்தார்த் தேசாய் (13 புள்ளி), ரோகித் பாலியன் (7 புள்ளி) ஆகியோர் மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்