லிபியா நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் அகதிகள் படகுகளில் செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக செல்லும்பொழுது அடிக்கடி கடலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 75 அகதிகளை ஏற்றி கொண்டு படகு புறப்பட்டுள்ளது.
இந்த படகு லிபியாவின் மேற்கு கடலோர மாவட்டமான கும்சியிலிருந்து சென்றுள்ளது. திங்கள்கிழமையன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று கவிழ்ந்துள்ளது. இதில் 57 அகதிகள் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவை சேர்ந்த 18 அகதிகள் படகு கவிழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தி தொடர்பாளர் சஃபா மிஷெலி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…