இரண்டாம் காலாண்டில் 51% சரிவை கண்ட தென் ஆப்பிரிக்க பொருளாதாரம்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும், உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாத்திக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி உடன் கடந்த ஆண்டை ஜிடிபி-யை ஒப்பிடுகையில் 51% குறைந்துள்ளது. இதில், கட்டுமானத்துறை 76.6 சதவீதமும், உற்பத்தி துறை 74.9 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் 1.8 சதவீதம் மட்டுமே சரிவை சந்தித்த நிலையில், இரண்டாவது காலாண்டில் பெரும் சரிவை தென் ஆப்பிரிக்கா சந்தித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் விவசாயம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. ஏனெனில், சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெக்கன் கொட்டைகளுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதால் விவசாயத் துறை மட்டும் 15% வளர்ச்சியை கண்டுள்ளது.
அதிலும், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்ததால், கட்டுமானத் துறை தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…