இந்தியாவில் இதுவரை 50,000 ஜாவா பைக் விற்பனை செய்துள்ளதாக கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா க்ளாஸிக், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகள் நிலைக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மோட்டார் சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் ஜாவா 42, ஜாவா க்ளாஸிக், ஜாவா பெராக் என மொத்தம் 3 வகையான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த 12 மாதங்களில் வெற்றிகரமாக நாடு முழுவதும் 50,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, டிசம்பர் இறுதிக்குள் நாடு முழுவதும் ஜாவா டீலர்களின் எண்ணிக்கையை 205 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. ஜாவா நிறுவனம் இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா நேபாள நாடுகளுக்கும் தனது பைக்குகளை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதாக ஜாவா நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…