கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் , மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு சினிமாத்துறை சேர்ந்த பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 கோடி நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே, அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு பணியாளர் களுக்க்காக ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கவும், அதனை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மேலும் சென்னையில் உள்ள செங்கல்பேட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்தியா நடிகர் சங்கத்திற்கு மீண்டும் ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார்.
மேலும் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரூ. 50 லட்சத்தை அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார். ஊரிலுள்ள ஏழை எளிய மக்களும், சாலைகளில் வசிக்கும் மக்களும் பசியில்லாமல் வாழ தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம். இந்த ஊரடங்கு காலத்தில் பசியில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் செயல்படும் அம்மா உணவகங்களுக்கு ரூ. 50 லட்சத்தை நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார். மேலும் இந்த பகுதிகளில் தான் ஏராளமான சினிமாயுலகில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை ராகவா லாரன்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரான ராஜசேகர் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையரான பிரகாஷ் அவர்களிடம் வழங்கியுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…