காங்கோ தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட நிலைசரிவவில் சரிந்ததில் 50 பேர் பலி!

Default Image

காங்கோ தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட நிலைசரிவவில் சரிந்ததில் 50 பேர் பலி.

காங்கோ ஜனநாயக குடியரசு கிழக்கிலுள்ள கமிட்வா அருகே நேற்று மதியம் ஒரு தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கடும் மழையால் தங்க சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கி உள்ளனர், யாரும் வெளியில் வரமுடியவில்லை.

50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. சுரங்க விபத்துகள் காங்கோவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை இருப்பினும் விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துகொண்டே தான் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்