ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

ஈராக் நாசிரியா நகரில் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கின் பிரதமர் இந்த தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் மேலாளரை சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டதாகவும், இந்த மருத்துவமனையில் 70 படுக்கைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட பொழுது இந்த அறையில் 63 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில், 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்து உள்ளனர்.  மீட்பு குழுவினர் தீவிரமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தீ அதிக பகுதிகளில் பரவியுள்ளதால் மீட்பு குழுவினருக்கு சிரமம் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

4 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

5 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

6 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

7 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

8 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

8 hours ago