சாலையில் வேகமாக கார் ஓட்டி போலீசாரின் பிடியில் சிக்கிய 5 வயது சிறுவன்.
நெடுஞ்சாலையில், அமெரிக்காவின் உட்டா மாகாண காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைபிடிக்காமல், தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த காவல்துறையினர் வாகனத்தை மறித்து, அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த சிறுவனை பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவன் தனக்காக ஒரு விலை உயர்ந்த சொகுசு காரான லம்போகினி மாடல் காரை வாங்க கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறுவனின் இந்த பதிலை கேட்டு வியப்பில் ஆழ்ந்த காவல்துறையினர், அந்த சிறுவனிடம் நடத்திய சோதனையில் அவரிடம் இந்திய மதிப்பில் 220 ரூபாய் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சிறுவனின் பெற்றோரை வரவழைத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் ஓட்டி வந்த கார் அவரது பெற்றோர்கள் உடையது என்பதும், தொலைக்காட்சியைப் பார்த்து கார் ஓட்டக் கற்றுக் கொண்டதாகவும் அச்சிறுவன் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…