தென் கொரியாவில் உள்ள தென் கிழக்கு பகுதியான குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பயணிகளை ஏற்றுவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பஸ் நிலையம் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் மீது இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் என பல சிக்கினர்.
எனவே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த கட்டிட விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
5 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடம் பலவீனமாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மேலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…