பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Default Image
  • தென்கொரியாவில் பயணிகள் பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
  • இந்த விபத்தில் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவில் உள்ள தென் கிழக்கு பகுதியான குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பயணிகளை ஏற்றுவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பஸ் நிலையம் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் மீது இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் என பல சிக்கினர்.

எனவே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த கட்டிட விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

5 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடம் பலவீனமாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மேலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்