இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதில் முதல் இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல் நாளில் 12.35 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் 5.81 கோடி வசூல் செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 2.85 கோடி வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 2.55 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் 2.10 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இன்று வெளியான கர்ணன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…