கர்ப்பப்பை இறக்கத்தை குணமாக்கும் சாதிக்காய் மருத்துவம்..!
இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் என்ற தொந்தரவு உள்ளது. அவர்கள் தாங்களே இதுபோல எழிய முறை மருந்து செய்து சாப்பிட்டுவர கீழிறங்கிய கர்ப்பப்பை மேலே ஏறும்.
ஒரு சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.
அதை பசு வெண்ணெயால் மூடவும்.
அதை நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,
நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.
சிறிது நேரத்தில், வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும். சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,
மேலும், மேலும்,
பசு வெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.
இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும்.
இறுதியாக மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை, நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.
இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, காலை, மாலை இரு வேளையும், தேனில் உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில், இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.
வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு, தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.