கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம்

Default Image
இந்திய விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடகோரியும் ,விவசாய பொருள்களுக்கு நியமான விலை வழங்கிடகோரியும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 41 நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக கைவிட்டு விட்டு தமிழகம் திரும்பினர்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் பல்வேறு நூதன முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று தமிழக விவசாயிகள், கொட்டும் மழையில், தங்கள் முன் மண்டை ஓடுகளை வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் தங்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்பதை அடையாளப்படுத்தவே சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போராடி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
தமிழக விவசாயிகளின் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, தங்களை காலனியால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்