43% குழந்தைகள் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளை கொண்டுள்ளன – ஆய்வில் தகவல்.!

Default Image

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஒரு தனித்துவமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவியவந்துள்ளது.

குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பொதுவாக குளிர்காலத்தில் தொற்றுநோய்களின் ஒரு வகை ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்று நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இது, அவர்களுக்கு நோய்க்கு எதிராக ஒரு அளவிலான பாதுகாப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 300 க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் 48 குழந்தைகளின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, அதனை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 170 பேரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டனர்.

அதன்படி, பல குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிபாடியை கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகின்றது.

இதனை, இங்கிலாந்தில் பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ரெட்ரோவைரல் இம்யூனாலஜி ஆய்வகத்தின் தலைவரான ஜார்ஜ் காசியோடிஸ் இந்த ஆய்வினை நடத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்