ஈரானில் ஒரே நாளில் 43 பேர் உயிரிழப்பு…பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வு..
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. ஈரானில் கடந்த 07-ம் தேதி ஒரே நாளில் 21 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. இதையெடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 பேர் பலியாகி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் ஈரான் நாட்டு அரசு சார்பில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறிய நிலையில் நேற்று ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்ந்ததுள்ளது.மேலும் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,167 ஆக உயர்ந்துள்ளது.