மறைந்த நடிகர் புனீத் ராஜின் இரு கண்களால் பார்வை பெற்ற 4 இளைஞர்கள்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தனது வீட்டில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலி காரணமாக கீழே சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பின் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியது.நடிகர் புனித் ராஜ்குமார் 48 இலவச பள்ளிக்கூடங்கள், 20 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், சுமார் 1,800 மாணவ மாணவியரின் கல்வி என தன் வருமானத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கண்களும் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. பின் நவீன தொழில்நுட்பம் மூலம் இரண்டு கண்களும் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினை கொண்ட நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…