பாகிஸ்தானில் உள்ள சொகுசு ஹோட்டலில் கார் குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தென்மேற்கு நகரமாகிய குவட்டாவில் உள்ள ஒரு சொகுசுக் ஹோட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த ஹோட்டலில் அன்று பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்த பொழுது அவர் அந்த ஹோட்டலில் இல்லை என உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் அகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள், திடீரென கார் குண்டு வெடித்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் வந்து பார்த்த பொழுது ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்து விட்டதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு அடியில் வெடிபருட்கள் நிறைந்த ஒரு கார் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…