நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கிராம மக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கடுனா பகுதி கவுரா நகரில் உள்ள மடமய் எனும் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் பொழுது இந்த மர்ம நபர்கள் சில வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இது குறித்து அரசு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரசுப் படையினர் மர்ம நபர்களை விரட்டி அடித்துள்ளனர். அதன் பின்பு மூன்று வீடுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் நைஜீரியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…