மரியுபோல் தியேட்டர் தாக்குதலில் 300 பேர் உயிரிழப்பு..?

Default Image

கடந்த வாரம் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டரில் நடந்த தாக்குதலில் 300 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து 1 மாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மரியுபோல் நகரில் உள்ள 1 தியேட்டர் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர். இதில் தியேட்டர் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த தியேட்டரில் பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது ரஷ்ய ராணுவத்தின் தளபதிகளுக்கு தெரியும் என்று அதிகாரிகள் கூறினர். இது மட்டுமின்றி, அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்ய வீரர்கள் இந்த நகரத்தில் எஞ்சியிருக்கும் பொதுமக்கள் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என கூறினார். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பசி மற்றும் தாகத்துடன் உயிர் பிழைக்க போராடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump