பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம்.

.24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.!

இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றது. அப்போது அந்த விமானத்தில் சுமார் 300 இந்தியர்கள். அதில் 11 சிறார்கள் துணைக்கு யாருமில்லாமல் இருந்ததை அறிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பதும் , தற்போது அமெரிக்கா அல்லது கனடா செல்லல திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக சந்தேகத்தின் பெயரில் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஒரே நேரத்தில் இதனை பேர் ஒரே விமானத்தில் அதுவும் 11 சிறார்களுடன் அமெரிக்கா செல்ல முனைந்ததை கவனித்த உடன் விமானத்தில் உள்ள சிலர் கடத்தப்பட்டு இருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைத்துள்ளனர்.

அவர்களிடம் கடந்த 3 நாட்களாக பாரிஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நேற்று முழுதாக நிறைவு பெற்று இன்று காலை 10 மணி அளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) புறப்பட்டு இந்தியா , மும்பை செல்ல பாரிஸ் நீதிபதி உத்தரவி ட்டார்.  3 நாட்களாக விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு வத்ரி விமான நிலையத்தில் உணவு மற்றும் சூடான பானங்கள் தவிர, தற்காலிக படுக்கைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

20 minutes ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

43 minutes ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…

2 hours ago

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

10 hours ago

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago