எகிப்திலிருந்து இந்தியாவுக்கு மூன்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்ட 30 டன் மருத்துவ உபகரணங்கள்!

Published by
Rebekal

இந்தியாவின் கொரோனா சிகிச்சைக்காக எகிப்தில் இருந்து முப்பது டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் மூன்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே, ஆக்சிஜன், மருத்துவமனை உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனை சரி செய்வதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் இதுவரை வழங்கி உதவி உள்ளது.

தற்போதும் எகிப்து நாட்டில் இருந்து 30 டன் எடையுள்ள மருத்துவ காரணங்கள் மூன்று விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 8,000 டெம்ரெசிவர் மருந்து குப்பிகள், 300 ஆக்சிஜன் சிலிண்டர், 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் விமானங்களில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடு களில் ஒன்றான எகிப்தில் இருந்து வந்துள்ள இந்த மருத்துவ உபகரணங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

3 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

5 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

5 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

6 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

7 hours ago