அம்மாவின் ஃபோனில் 54,000 -க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை!

Published by
Rebekal

குழந்தைக்கு விளையாட கொடுத்த போனில் 54 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த குழந்தை.

முன்பெல்லாம் பெரியவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்பொழுது பிறந்த குழந்தை கூட கையில் போனை கொடுத்தால் அனைத்தும் அறிந்து கொள்ளும் போல அவ்வளவு தூரம் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் அதிக அளவில் காணப்படுகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப குழந்தைகளும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக, குழந்தையின் அழுகையை அடக்க பெற்றோர்கள் தங்களது போனை கொடுத்து விட்டு சாதாரணமாக சென்று விடுகிறார்கள். இதனால் உடல் ரீதியான பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலும் பிரேசிலில் பொருளாதார ரீதியாக ஒரு மூன்று வயதுக் குழந்தையால் அவரது பெற்றோருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றால் பாருங்களேன்.

பிரேசில் நாட்டில் உள்ள ரெசிப் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய டாம் எனும் மூன்று வயது குழந்தைக்கு அவரது தாய் போனை கையில் கொடுத்து விட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார். இந்த குழந்தை அதற்க்கே தெரியாமல் உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து விட்டது. மொத்தமாக ஆர்டர் செய்து உள்ள உணவுகளில் விளம்பர உணவுகள், மகிழ்ச்சியான உணவு, சிறப்பு பொம்மைகள், மில்க்ஷேக், தண்ணீர் பாட்டில் என இந்திய மதிப்பில் 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அந்த குழந்தை அநத செயலி மூலமாக அதனை அறியாமலேயே ஆர்டர் செய்துள்ளது.

வீட்டுக்கு ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் வந்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பணத்தைக் கொடுத்து டெலிவரி பாயை அனுப்பி விட்டாலும் எப்படி இது நடந்தது என தெரிந்து கொண்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கூறுகையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய கூட்டுக் குடும்பம் ஆகிய எங்களது குடும்பம் இருந்ததால் உணவுகளைப் பகிர்ந்து கொண்டோம் எனவே உணவு எதுவும் வீணாகவில்லை. ஆனால் நாங்கள் கொரோனா ஊரடங்கின் போது அடிக்கடி உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியதால் குழந்தை அதனை கற்றுக்கொண்டதாக அக்குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

44 minutes ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

2 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

3 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

3 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

4 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

4 hours ago