அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பிரார்த்தனையில் இருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் தேவாலயத்துக்குள் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் கத்தினர்.
பலர் அங்கு உள்ள மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். இந்நிலையில் அந்த மர்ம நபர் சுட்டதில் 3 பேர் உடலில் குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். பின்னர் தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த மர்ம நபரை சுட்டு கொன்றார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த மூன்று பேரில் சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.இந்த தாக்குதல் யார் நடத்தியது..? தாக்குதலின் பின்னணி என்ன..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…