அரசு மற்றும் தனியார் அறிவியல் மற்றும் கலைக் கல்லுாரி மாணவர்கள் இடையே ஆக.2ம் தேதி போட்டி
திருத்தணி: மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அறிவியல் மற்றும் கலைக் கல்லுாரி மாணவர்கள் இடையே கட்டுரை, பேச்சு, கவிதை மற்றும் ஓவியம் போன்ற போட்டிகள், வரும், ஆக.2ம் தேதி நடக்கின்றன.மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் அறிவியல், கலைக் கல்லுாரி மாணவர்கள் இடையே கட்டுரை, பேச்சு, கவிதை மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள், அடுத்த மாதம், ஆக.2ம் தேதி, திருத்தணி அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.கல்லுாரி முதல்வர் அ.கலைநேசன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைக்கிறார். மாவட்டத்தில் உள்ள மொத்தம், 49 கல்லுாரிகளில் இருந்து, மாணவ, மாணவியர் என, 500க்கும்மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில், ஒவ்வொரு போட்டிகளிலும், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தணி கல்லுாரி முதல்வர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.