இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி விபத்து – 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!

Default Image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பேருந்தை ஓவர் டேக் செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்