ஜூலை29 ல்அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்..,

Default Image

கோவை:அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், கோவையில் வரும், 29ல் நடைபெறுகிறது; இதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது.ஜெ., மறைவுக்குபின், அ.தி.மு.க.,வில் பல பிரிவுகள் உருவாகியுள்ளன. பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், கோவை கொடிசியா வளாகம் அருகே உள்ள மைதானத்தில், வரும், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.25 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலும், 15 ஆயிரம் இருக்கைகள் போடவும் திட்டமிட்டு உள்ளனர். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முனுசாமி, மதுசூதனன், மைத்ரேயன், பாண்டியராஜன், விசுவநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.இதற்கான கால்கோள் விழா, மைதானத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் தாமோதரன், எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், சின்ராஜ், முன்னாள் மேயர்கள் மலரவன், ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்