நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27ல் மனித சங்கிலி போராட்டம்:ஸ்டாலின்
சென்னை : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27ல் திமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 85% , ஆதலால் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆகவே, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கூறிய அவர்,முரசொலி பத்திரிகையின் பவள விழா ஆகஸ்ட் 10,11 தேதிகளில் நடைபெறுகிறது என்றார்.