இலங்கையில் 21,000 பேருக்கு டெங்கு பாதிப்பு..!-7 பேர் உயிரிழப்பு..!

Default Image

இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 21,000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இலங்கையில் டெங்கு  காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் 1,860 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது இலங்கை சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, இலங்கையில் 21,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.

மேலும், இதனால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மழைக்காலம் தற்போது தொடங்கியிருப்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது நகரங்களில் இருந்து தொடர்ந்து கிராமங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் யாருக்கும் காய்ச்சல், அதிகமான உடல் வலி, மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்