பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மழை காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கெச் பகுதியிலிருந்து சென்ற வாகனம் ஒன்று முர்க் அப் நடி என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் வயதுமுதிர்ந்த பெண் உட்பட இரண்டு பேரின் உடல்கள் மீட்டுள்ளனர். மேலும் அதிலிருந்த 2 குழந்தைகள் காணவில்லை.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அரசு செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி, இதுவரை பாகிஸ்தானில் 21 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மழை வெள்ளத்தால் 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அங்குள்ள பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…