2018 காமன்வெல்த் போட்டி :டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்று சாதனை …!

Default Image

இன்று காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

பதக்கப் பட்டியலில் ஏற்கெனவே இந்தியா 3-வது இடத்தில் உள்ள நிலையில் போட்டியின் 7-வது நாளான இன்று காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்