2018 காமன்வெல்த் போட்டி : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்..!

Default Image

இந்திய வீராங்கனை காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில்  தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்காம் நாளான இன்று மகளிருக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 69 கிலோ எடை பிரிவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் புள்ளிக் கணக்கில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்..

நேற்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் 77 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். வெங்கட் ராகுல் ரகாலா என்ற மற்றொரு வீரர் 85 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், பளுதூக்கும் போட்டியில் மட்டும் 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்