சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. அதில் 132 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,693 பேர் ஹூபேயில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185-ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 542 பேருக்கு கொவிட-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து 300 அமெரிக்கர்களை மீட்கும் பணியில் 2 வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈடுபட்டது. இதில் 2 விமானங்கள் மூலம், டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா விமான நிலையங்களுக்கு அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களில் 14 பேர் கலிபோர்னியாவில் தனியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…