2004 வெடிகுண்டு தாக்குதல்:19 பேருக்கு ஆயுள் சிறை ,19 பேருக்குத் தூக்கு தண்டனை- வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

Default Image

வங்கதேசத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வழக்கில் முன்னால் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் சிறையும், மற்ற 19 பேருக்கு மரண தண்டனையும் விதித்து டாக்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி அவாமி லீக் கட்சி சார்பில் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 24 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பால் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவும் காயமடைந்தார். இந்த குண்டுவெடிப்பில் இருந்து அவருக்கு ஒரு பக்கம் காதுகேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கின் விசாரணை டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில்  நடந்து வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அமைச்சர்கள் 4 பேர், புலனாய்வு துறை அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 49 பேர்குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டது வங்கதேசத்தில் உள்ள ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பாகும்.இந்த குண்டுவெடிப்பில் முக்கிய இலக்காக இருந்தது தற்போது பிரதமர் ஷேக் ஹசினா.ஆனால், அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பி்ல படுகாயத்துடன் உயிர்பிழைத்தார். ஆனால், கட்சியின் முன்னாள் தலைவர் ஜில்லூர் ரஹ்மான், அவரின் மனைவி இவி ரஹ்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்து எல்லா வாதங்களும் முடிந்த நிலையில்  இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 49 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரீக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், 19 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதித்து, நீதிபதி ஷாகித் நூருதீன் தீர்ப்பளித்தார்.இதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தற்போது லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அந்நாட்டு அரசிடம் தனக்கு புகலிடமும் கேட்டுள்ளார். இதனால், தாரிக் ரஹ்மான் வசிக்கும் இடம் குறித்த தெரிவிக்க இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இதற்கிடையே ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்று முன்னாள் பிரதமர் கலிதா ஜியா சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத்தீர்ப்பு குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் கூறுகையில், வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இங்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்