சினிமாவில் நடப்பது போன்று காதலுக்காக 2000 கோடி சொத்தினை விட்டுகொடுத்த இளம்பெண்!!!

Default Image

மலேசிய கோடிஸ்வரர் கோ கே பெங். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 2000  கோடி. மலேசிய முன்னணி தொழிலதிபரான இவர் பல்வேறு முக்கிய நட்சத்திர விடுதிகளின் அதிபர் மற்றும் பங்குதாரராக உள்ளார்., மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.

இவரது மகள்ஏஞ்சலின். இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது தனது நண்பர் ஜடிடிஹா எனபவரை காதலித்து உள்ளார்.   ஏஞ்சலின் கோ  இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கரிபியன் தீவுகளை சேர்ந்த  தரவு விஞ்ஞானியான ஜடிடிஹாவை தனது   மகள்  பிரான்சிஸ் திருமணம் செய்து கொள்வதை  தந்தை ஏற்கவில்லை. 

 

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்தால் கோடிகணக்கான சொத்தினை இழக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்தும், பணத்தை விட காதலே முக்கியம் என முடிவெடுத்த ஏஞ்சலின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்துள்ளார்.

மலேசியாவின் மிகப்பெரி கோடிசுவரர்களின் ஒருவரான ஏஞ்சலினின் திருமணம் குறைந்த செலவில் மிக எளிமையாக  நண்பர்கள் உள்ளிட்ட 30 பேர் முன்னிலையில் பெம்ப்ரோக் கல்லூரி தேவாலயத்தில் நடைபெற்றது.

இது குறித்து ஏஞ்சலின் கூறும் போது :-

“என் தந்தையின் நிலைப்பாடு தவறானது என நான் நம்பினேன். அதனால், எது சரியென்ற கேள்வியே எனக்குள் எழவில்லை. நீங்கள் பணத்தை பெறலாம் அது ஆசிர்வாதம்; அது நீங்கள் நினைத்ததை செய்ய வழிவகுக்கும், வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும், ஆனால் அதனுடன் சேர்த்து ஆதிக்கம் உள்ளிட்டவையும் வரும்.

 பெரும் பணத்தையும், வசதி வாய்ப்பையும் இழந்ததில் வருத்தங்கள் எனக்கு ஏதுமில்லை. சிக்கனமாய் வாழ்வது எப்படி என்று தான் கற்றுக் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்