மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது
  • ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹஸ்வீ கிராம மக்கள் 20 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைதுசெய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பல்வேறு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் உருவாகியுள்ளது.

இந்த கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் ராணுவம் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து மியான்மரில் உள்ள ஹஸ்வீ எனும் கிராமத்தில் கிளர்ச்சியாளர் ஒருவரை மியான்மர் ராணுவத்தினர் நேற்று கைது செய்தனர்.

எனவே அந்த நபரை விடுவிக்கும் படி, கிராம மக்கள் இணைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் அந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 20 கிராம மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

3 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

3 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

4 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

4 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

5 hours ago