உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 89,907 ஆகவும், வரைஸிலிருந்து குணமடைத்தவர்களின் எண்ணிக்கை 340,349 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசால் ஐரோப்பிய நாடுகளில் பலவும் கொடூரமாக பாதிக்கப்பட்டாலும், இத்தாலியில் தான் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139,422 ஆகவும், உயிரிழப்பு 17,669 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 18ம் தேதி தெற்கு நகரமான பாரியில் உள்ள மருத்துவமனையில் தாயும் இரண்டு மாத குழந்தையும் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதான் நாட்டின் மிக குறைந்த வயது நோயாளி என கருதப்பட்ட 2 மாத குழந்தை, தற்போது கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…