இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.
ஹூண்டாய் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தனது “கிரெட்டா” ரக எஸ்யூவி கார்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்த கார், இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்பொழுது கிரெட்டா காரை வெளியிட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து.
இந்த கிரெட்டா எஸ்யூவி தமிழகத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தநிலையில், இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், தற்பொழுது அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.
இதுவரை புதிய மற்றும் முந்தைய கிரெட்டா என மொத்தமாக 2,00,000 கிரெட்டா யூனிட்டுகள் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ஹூண்டாய் இந்தியா நிறுவனம், மேட்-இன்-இந்தியா கார்களை ஏற்றுமதி நோக்கில் தீவிரமடைந்துள்ளது.
அதில் முதல்கட்டமாக, சான்ட்ரோ, கிராண்ட் i10, எக்ஸ்சென்ட், கிராண்ட் i10 (நியோஸ்) & கிராண்ட் i10 (ஆரா), எலைட் i20, i20 ஏக்டிவ், அசென்ட் (வெர்னா), வென்யூ மற்றும் கிரெட்டா போன்ற 10 மாடல் கார்களை 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…