போலி ஆவணங்களை வைத்து ரூ.2.70 கோடி மோசடி – விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி புகார்!

Published by
Rebekal

போலி ஆவணங்களை வைத்து ரூ.2.70 கோடி மோசடி செய்துவிட்டதாக  விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார்.

நடிகர் சூரியுடன் நடிகர் விஷ்ணு விஷால் வீர தீர சூரன் எனும் தமிழ் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் நட்பிலிருந்து வந்தனர். இந்நிலையில் விஷாலின் தந்தை அந்நேரத்தில் டிஜிபியாக இருந்ததால் அவரது தந்தை ரமேஷ் குடவாலாவை சூரிக்கு விஷ்ணு விஷால் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து நிலம் வாங்க வேண்டுமென சூரி ரமேஷிடம் கேட்டதால் சிறுசேரியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி தருவதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாயை விஷ்ணு விஷாலின் தந்தை கேட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தின் மதிப்பு அவர் வாங்கிய 3 கோடியே 10 லட்சத்தை விட மிக கம்மி எனவும், நிலத்தின் மதிப்பை கூட்டி போலி ஆவணம் தயாரித்து தன்னிடம் விற்றதும் தற்பொழுது புரோட்டா சூரி அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த நிலமும் தற்போது வில்லங்கமான இடமாக இருப்பதால் அதை மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். இருப்பினும் ரமேஷ் சூரியிடம் பணத்தை கொடுக்காமல் இருந்ததால் , காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் முன்னாள் டிஜிபி என்பதால் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே தனது பணத்தை மோசடி செய்துள்ளதாக, ரமேஷ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் மீதும் சேர்த்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த குற்றவியல் போலீசார் இதனடிப்படையில் ரமேஷ்  மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் என் மீதும், தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றசாட்டுகள் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது எனவும், சட்டப்படி அவற்றை எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

24 minutes ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

30 minutes ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

41 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

1 hour ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

2 hours ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago