நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த புகைப்படம் ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நெய்வேலியில் நடைபெற்று வந்தபோது, வருமான வரி சோதனையினர் நடிகர் விஜயின் வீட்டில் சோதனையிட்டனர். அதற்குப் பிறகு நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.வருமான வரி சோதனை முடிந்த பிறகு மாஸ்டர் படப்பிடிப்புக்காக விஜய் நெய்வேலிக்கு வந்த போது அவரைபார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.
இதனை பார்த்த நடிகர் விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி தனது ரசிகர்களுடன் புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படம் எடுத்து ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #1YearOfMasterSelfie என்ற ஹாஸ்டேக்கை வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…