நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த புகைப்படம் ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நெய்வேலியில் நடைபெற்று வந்தபோது, வருமான வரி சோதனையினர் நடிகர் விஜயின் வீட்டில் சோதனையிட்டனர். அதற்குப் பிறகு நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.வருமான வரி சோதனை முடிந்த பிறகு மாஸ்டர் படப்பிடிப்புக்காக விஜய் நெய்வேலிக்கு வந்த போது அவரைபார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.
இதனை பார்த்த நடிகர் விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி தனது ரசிகர்களுடன் புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படம் எடுத்து ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #1YearOfMasterSelfie என்ற ஹாஸ்டேக்கை வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…