சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து 19 பேர் பலி…!!

Default Image

சீனாவில் உள்ள ஷான்ஜி மாகாணத்தின் , ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீடிரென சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க மீட்புக்குழுவினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,  66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,இன்னும்  2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்