19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல தொழில் நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், முன்னணி விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க 25 மில்லியன் டாலர் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிதியும் காலியானதால், செப்.1- ம் தேதி முதல் பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், அரசு நிதி வழங்கும் பட்சத்தில், இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் என்றும், இல்லையேல் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…