எகிப்து சுற்றுலா கப்பலில் 18 தமிழர்கள் தவிப்பு..!

Default Image

சீனாவின் உகானில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகம் நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவை அடுத்து தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகமாக உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் எகிப்து நாட்டில் உள்ள லக்ஸார் நகரில் நைல் நதியில் ஏ சாரா என்ற பயணிகள் கப்பல் ஓன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள 18 தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கப்பலில் உள்ள 33 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் சிக்கி உள்ள 18 தமிழர்களில் சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்