உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த, பல வதந்தியான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் கோவிட்-19 தொடர்பாக 18 மில்லியன் malware and phishing மின்னஞ்சல்களை பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. தினமும் 240 மில்லியன் ஸ்பாம் மின்னஞ்சல் உருவாவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் 99.9 சதவீத போலி மின்னஞ்சல்களை தொடர்ந்து முடக்கி வருவதாகக் கூகுள் கூறியுள்ளது.
இந்த மின்னஞ்சல்களில் ஒன்று கொரோனா பற்றிய பீதியும் அல்லது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து பயனர்களைப் பதில் அளிக்க வைக்கின்றனர்.
அப்படி இலையென்றால் உலக சுகாதார அமைப்பு போல சில மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். இதை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.பயனர்கள் தங்களுக்குத் தெரியாத முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் file-லை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
மேலும் தெரியாத முகவரியிலிருந்து வரும் லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கும் முன் அது உண்மையான லிங்க் தானா என்று பயனர்கள் பார்க்க வேண்டும் என கூகுள் கூறியுள்ளது.
Malware எனப்படுவது ஒரு வகை கணினி வைரஸ் . இது கணினியில் உள்ள தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும்.
phishing எனப்படுவது மின்னஞ்சல் மூலமாக ஏமாற்றி தகவல்களை பெற்று அதை முறைகேடாக அல்லது சட்ட விரோதமாக பயன்படுத்துவது.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…