நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்-18 பேர் பலி..!

Default Image

நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நைஜீரியாவில் இரண்டு தனியார் பேருந்துகள் பிர்னிங்குடு என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேருக்கு நேர் மோதிய வேகத்தில் பேருந்துகளில் தீப்பிடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பிறகு தகவல் அறிந்து அங்கு மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.

இவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த பேருந்து விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று  வருகிறது. மேலும், அங்கிருக்கும் ஒழுங்கற்ற சாலைகளால் இதுபோன்ற அசம்பாவிதம் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்