ஆப்கானிஸ்தானில் உள்ள அக்சா மாவட்டத்தில் அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது வழக்கம். இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வடக்கு ஜவ்ஜ்ஜான் மாகாணத்தின் அக்சா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர். அப்பொழுது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த தலிபான் அமைப்பினர் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலிபான் அமைப்பின் தளபதி காரி முபீன் என்பவர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…