ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம்.!

Default Image

ஐஸ்லாந்து நாட்டில் ஒரு வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் ஒரு சிறிய எரிமலை வெடிப்பு ஏற்பட சாத்தியங்கள் உள்ளதாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.ஏனெனில் கடந்த 8 நாட்களில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியமான ரெய்க்ஜேன்ஸில் சுமார் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ,எனவே கடந்த 8 நாட்களில் 24 மணி நேரமும் பூமி அசைவதை உணர முடிந்ததாகவும் தலைநகர் ரெய்காவிக் குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனவே ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம்,கெய்லிர் மலைக்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மலையை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.பொதுவாக ஆண்டுக்கு 1,000 முறை மட்டுமே ஐஸ்லாந்து நாடு நிலநடுக்கத்தால் பாதிக்க்கப்படும்.ஆனால் கடந்த 8 நாட்களில் 17,000 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்