முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கிங் செய்தது தொடர்பாக மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 ட்விட்டர் கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் முகவரிக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் பதிவிடப்பட்டது. 45 ட்விட்டர் கணக்குகளில், பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு, லாக் இன் செய்து ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது,1,000 டாலர்களை நீங்கள் எனக்கு அனுப்பினால் அது 2,000 டாலர்களாக இரு மடங்காக உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று பதிவிடப்பட்டது.
பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர்தான் மர்மநபர்கள் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்தது தெரியவந்தது.கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் தான் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் மீண்டு வந்தது.இதனிடையே தான் அமெரிக்காவோ இந்த ஹேக்கிங் செய்ததற்கு முக்கிய காரணம் சீனா மற்றும் ரஷ்யா என்று சந்தேகித்தது. இது குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது.விசாரணையில் ஹேக் செய்தது இளம் வயதினர் என்று தெரியவந்தது.3 பேர் ஹேக் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில்,நிமா பாசில் என்ற 22 வயது இளைஞர் புளோரிடாவை சேர்ந்தவர். சேப்பேர்ட் என்ற 19 வயது இளைஞர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.கிராகாம் கிளார் என்ற 17 வயது சிறுவன் புளோரிடாவை சேர்ந்தவன்.இந்த சிறுவன் தான் இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மூவரையும் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஹேக் மூலமாக குறைந்தது 1 லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…