17 வயதில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை..!

Default Image

அயர்லாந்து – நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் டப்ளினில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய அமெலியா கெர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 145 பந்தில் 31 பவுண்டரி, 2 சிக்சருடன் 232 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தார்.

இவரது இரட்டை சதத்தால் நியூசிலாந்து 440 ரன்கள் குவித்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது இரட்டை சதம் இதுவாகும். மேலும், 17 வயது 243 ரன்களில் இந்த இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் கெர் 19 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 174 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீராங்கனை கிளார்க் 229 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்